tag:blogger.com,1999:blog-49810888733921573482024-03-06T06:16:26.634+05:30தீராத விளையாட்டுப் பிள்ளைRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.comBlogger953125tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-68834686452835947572020-09-15T13:42:00.004+05:302020-09-15T13:42:39.047+05:30 மத்யமா செகண்ட் க்ளாஸ்"தெனம் வெட்டி அரட்டை அடிக்கறத்துக்கு கூடுதலா ஒரு பாஷை கத்துக்கலாமேடா தம்பி.." என்று சாரதா பாட்டி அங்கலாய்ப்போடு கேட்டபோது அது ஒரு வில்லங்கமான கேள்வியாகத் தெரியவில்லை. "ஈ...." என்று முப்பத்திரெண்டும் தெரிய 'மய்யமாக' இளித்துவைத்தேன். வாயைத் திறந்தால் பொறிக்குள் எலியாகச் சிக்கிக்கொள்வோம் என்று தெரியும். ஒன்றிரண்டு நாள்கள் சென்ற பிறகு காலையில் கல்லூரி முடிந்து வந்து மத்தியான்ன போஜனம் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-76143541357671786232020-01-05T08:48:00.000+05:302020-09-15T13:39:45.963+05:30கர்மயோகி சாரதா
"தல ஒரேடியா வலிக்கறதுடா..." என்றாள் பவானி சித்தி .
டாக்டர் க்ளினிக்கில் அடியெடுத்து வைத்ததும் கண்களைச் சாய்த்து "இப்போ பரவால்லே போல்ருக்கு...." என்றாள்.
"முன்னாடி அவர் கொடுத்த மாத்திரையெல்லாம் சாப்டியோ"
"ம்.... இப்ப சரியாயிடுத்து.. இனிமே மாத்திரை வேண்டாம்..."
"குணத்துலே அப்படியே பாட்டியை உரிச்சு வச்சுருக்கே...." என்ற எனக்கு என்னுடைய அரைடிராயர் மன்னார்குடி நாட்களும் சாரதா பாட்டியும் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-86314090548837966292019-12-30T15:14:00.001+05:302020-09-15T13:39:43.746+05:30தாவணி போட்ட தீபாவளி
சின்னப் பசங்களாக இருக்கும் வரையில் வெடி கொளுத்தி குஜாலான மனசு வாலிபம் தலைப்பட புத்தாடையில் குஜிலிகளைக் காணும் ஆசை அரும்புமீசையோடு சேர்த்துத் துளிர்விட்டது. கன்னியரின் மனசைத் தெரிந்துகொள்ளாத கபோதிகள் சிலர் வெங்காய வெடியைக் கையில் கொண்டு போய் சாலையில் மெல்ல நடந்து செல்லும் பாவாடைத் தாவணிகளின் காலருகே அடிப்பார்கள். தீவிரவாதிகள். அப்போது திடுக்கிட்டு நெஞ்சில் கையை வைத்துக்கொண்டு மான் போல மிரளும் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-26581954392449708172019-12-30T13:11:00.003+05:302020-09-15T13:43:10.957+05:30பாட்டிகளின் காதலன்
"அச்சச்சோ... கடந்துவிட வேண்டுமே" என்று பதட்டப்பட்டேன். இங்கே நான் எழுதியதை நீங்கள் படிக்க எடுத்துக்கொள்ளும் அவகாசத்தை விட அவசரமாக மனது அடித்துக்கொண்டது. வாகனங்கள் விரையும் மெயின் ரோடு. இரண்டு பக்கமும் சோழாவரம் பந்தயத்தில் முதலிடம் பெற போட்டியிடுவது போல வேகமாகச் சென்றுகொண்டிருந்தார்கள்.
இடுப்பில் தண்ணீர் தளும்பத் தளும்ப பெரிய பித்தளைக் குடம். நல்ல வெயிட். கச்சலான தேகம். தலை முழுக்க வெண்பஞ்சு RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-6527530436678168272017-10-23T22:48:00.004+05:302017-10-23T22:48:56.654+05:30தெத்திப் பல்லும்.. பிடறி மயிரும்...
ஐயப்பன் கோயில் குருவாயூரப்பன் சன்னிதியில் கர்ப்பக்ரஹ கதவு சார்த்தி நெய்வேத்யம் நடந்துகொண்டிருந்தது. நடை திறந்து கற்பூரார்த்தி தரிசனம் செய்துவிட்டு பிரதக்ஷிணம் செல்லலாம் என்று சன்னிதி வாசலில் முதல் ஆளாய் நின்றுகொண்டிருந்தேன். இடதும் வலதுமாய் ஜெய விஜயர்கள் காவல் காத்துக்கொண்டிருந்தார்கள். கதவு திறக்கும்வரை குருவாயூரப்பனை ஐந்து நிமிடமாவது மனதில் சிறைப்பிடிக்க எண்ணினேன். பாரதத்தில் சகாதேவன் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57896297845993137982017-10-23T22:45:00.000+05:302017-10-23T22:45:14.547+05:30முருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்
நினைக்க முக்தி தரும் திருஅண்ணாமலை. தென்றல் வீசும் இளம் மாலைப் பொழுது.
பரத்தையர்களின் காமவாசம் தொலைத்து பரம்பொருளான முருகன் அருள் பெற்ற அருணகிரிநாதர் விஸ்ராந்தியாக மலையடிவாரத்தில் அமர்ந்திருக்கிறார்.
திருப்புகழ் மனதில் ஊற கண்களில் ஞானச்சுடர் ஒளிர இருப்பவரை நோக்கி கல்யாண சீர் எடுத்துச் செல்வது போன்று விதம்விதமான தட்டுக்களில் பழங்களும் பல வகையான இனிப்புகளும் பொற்காசுகளும் பட்டாடைகளுமாக RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-17837013233583734202017-10-23T22:39:00.000+05:302017-10-23T22:39:01.251+05:30நாராயணன் என்னும் நாமம்
இரவு ஒன்பதரைக்கு மேல் ஆகிவிட்டது. சாம்பு மாமாவும் கோபுவும் வெறிச்சோடிக்கிடந்த தெருவின் அமைதியைக் கிழித்துத் திண்ணையில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். கோபுவின் கையில் காது மடிக்கப்பட்ட மாத்ஸ் புத்தகம் இருந்தது. நாளைக்கு க்ளாஸ் டெஸ்டாம். சிறிது நேரத்தில் தெருமுனையில் நுழைந்த கடலை வண்டிக்காரன் இரும்பு சட்டியில் தோசைக் கரண்டியால் வாசிக்கும் "டட்டிட்டாங்.. டடாங்.." அவர்களது பேச்சுக்கு பின்னணி RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-39441361629468836172017-10-23T22:36:00.002+05:302017-10-23T22:36:29.955+05:30குத்துக்கல் ஏறி பிச்சை கேட்காதே!
பட்டினத்துப்பிள்ளை ஒரு மண்டலம் மத்தியார்ஜுனம் என்று அழைக்கக்கூடிய திருவிடைமருதூரில் தங்கி.. சிவநாமா சொல்லி... தபஸ் பண்ணினார். தினமும் மனதை ஒருமுகமாகக் குவித்து மகாலிங்கத்தைத் துதிப்பார். அப்புறம் கொஞ்ச நாழில அப்படியே சமாதி நிலைக்குப் போய்விடுவார். இப்படி தினமும் நடக்கும். அப்போதைய ராஜா ஒருத்தன் நித்யமும் பட்டினத்துப்பிள்ளையிடம் ஆசீர்வாதம் வாங்க ஆவலா வருவான். முக்கால்வாசி நேரம் அவர் சமாதி RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-58165055180832433362017-10-23T22:35:00.000+05:302017-10-23T22:35:05.988+05:30ஓம் நமோ வாசுதேவாய:
”நீர்க்க ஒரு டம்பளர் குடும்மா” என்று இரவு டிஃபனுக்குப் பிறகு சாம்பு மாமா தன் தாயாரிடம் கேட்டு வாங்கி மோர் குடித்தார். “இன்னுமா கோபு வரலே...” என்று கேட்டுக்கொண்டே சமையல் உள்ளிருந்து வாசல் திண்ணையில் வந்து உட்கார்ந்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக தெருவிளக்குகள் கண் சிமிட்டிக்கொண்டிருந்தன. தூங்கி வழிந்துகொண்டிருந்த ஒன்றிரண்டு பேர்களோடு அரசுப் பேருந்து கடமுடாவென்று கடந்து போனது.
”மாமா.. RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-51072997163644542322017-10-23T22:28:00.003+05:302017-10-23T22:28:34.937+05:30பாதி குடிச்ச சுருட்டு
ஒரு ஓட்டு வீடு பத்திக்கிச்சாம். வீடு பூரா எரிஞ்சு சாம்பலாயிடிச்சு. வீட்டோட ஓனர் வாசல்ல நின்னு ஓன்னு அழுதுக்கிட்டிருந்தானாம். அவனோட குடும்பமும் சேர்ந்து அழுதுச்சாம். சம்பந்தமே இல்லாம ஒருத்தன் அங்க வந்து நின்னு கேவிக்கேவி அழ ஆரம்பிச்சானாம். நீ ஏம்பா அழுவுற? இது உன்னோட வீடுமில்ல... அழறவங்க உன்னோட ரிலேடிவ்ஸ்ஸும் இல்ல.. ஸோ நீயும் சேர்ந்து ஏன் அழுவுற...ன்னு கேட்டாங்களாம்... அதுக்கு அவன் சொன்னான்..
RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-63843784620758763642017-10-23T22:27:00.002+05:302017-10-23T22:27:21.884+05:30ஊட்டி விடும் ஆப்
ஈக்காட்டுதாங்கல் அருகே வந்துகொண்டிருந்தேன். மை டியர் சேப்பாயியை உரசுவதுபோல இருவீலர் ஒன்று புயலாய்க் கடந்தது. படுத்து எழுந்து கழைக்கூத்தாடி வித்தைக் காட்டி முன்னால் சென்றவர் ஸ்விக்கி என்கிற ”வீட்டுக்கு வீடு உணவு விநியோகம்” செய்யும் ஆப்காரர்.
வீட்டில் சமைக்காமல் ஹோட்டலில் சாப்பிடுவது சோம்பேறித்தனம் என்றால் அந்த ஹோட்டலுக்கு கூட செல்லாமல் ஸ்விக்கியில் ஆர்டர் செய்து வீட்டு.. டிவியை அணைக்காமல்... RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-22059030367679146362017-10-23T22:18:00.001+05:302017-10-23T22:18:11.743+05:30நியோகம்
ஐந்தாவது வேதமாகிய மஹாபாரதத்தை விதம்விதமான நடையில் கோணத்தில் பலர் எழுதியதைப் படித்திருக்கிறேன். எந்த புத்தக சந்தையிலும் தேடித் தேடி வாங்குகிறேன். மஹாபாரதம் எப்பவுமே விழி விரியச் செய்கிறது. துவாபர யுக மனிதர்களின் வாழ்வும் சமுதாய தர்மங்களும் அவைகள் காட்டும் வழிமுறைகளும் வாழ்வியலின் எழிலையும் அவலத்தையும் ஒருசேர பிரதிபலிக்கிறது. இன்று வரையில் எதனோடும் ஒப்புமைப்படுத்திப் பார்க்கும்படியான இளமையோடு RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-47786545400197816702017-10-23T22:16:00.000+05:302017-10-23T22:16:08.338+05:30தெப்போற்சவம்
இன்று கோபாலனுக்கு ஹரித்ராநதியில் தெப்பம். பிரத்யேகமாக மன்னையை ஆளும் மன்னவன், ஸ்ரீகோபாலன், ஆனி மாசத்தில் பத்து நாள் அவன் கோபிள கோபிரளய முனிவர்களுக்கு தனது 32 சேவைகளையும் நிகழ்த்திக்க்காட்டிய ஹரித்ராநதி கரைக்கு ஹாயாக வந்துவிடுவான். அங்கு கோபியர்களுடன் ஜலக்ரீடை கூட நிகழ்த்திக் காட்டினானாம்.
தெற்குத் தெரு மண்டபத்தில் அலங்காரம் ஆகி நான்கு கரையும் வலம் வந்து திருமஞ்சன வீதி வழியாக கோயிலில் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-90551947569998553462017-10-23T22:07:00.000+05:302017-10-23T22:07:00.996+05:30காலுக்குதான் வயசாறது....
காலையில் சாம்பு மாமா “சங்கீதா இல்லையா?” என்று கேட்டுக்கொண்டே வீட்டிற்குள் வந்தார். பத்து வருஷ பழக்கம். பூஜைக்கு ஏற்றி வைத்த CHAMPA வத்தி மணக்க நாஷ்டா பண்ணிக்கொண்டிருந்தேன். கந்த சஷ்டி ராம நவமி இரண்டிற்கும் எங்களது நன்கொடை கட்டாயம் உண்டு. பணி ஓய்வு பெற்ற பின்பு பதினெட்டாய் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு சுற்றுபவர். சத்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு உழைக்காமல் உண்ணலாகாது என்ற கொள்கைப் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-73263599198309589182017-10-23T21:44:00.003+05:302017-10-23T21:44:45.764+05:30ஜுரக் கனா
ஜுரம் உச்சத்தில் இருந்தால் வாய் பிதற்றும். கண் திறந்தபடி இருக்க திடீர்க் கனாக்கள் வரும். சில்க், அனுராதா, டிஸ்கோ சாந்தி தோன்றி ஜிகுஜிகு அண்ட்ராயரில் மிரட்டும் இன்பக்கனா அல்ல. (எண்பதுகளில் வயசுக்கு வந்தவர்களான இப்போதைய பெருசுகளுக்கு மேற்கண்ட உதாரணம் சமர்ப்பணம்) ஜுரமடித்தால் சலனமே இல்லாமல் ஜடம் போல கிடப்பது சிலருக்கு அபூர்வமாய் வாய்க்கும். புண்ணியம் செய்த பிரகிருதிகள். என்னுடையது இரண்டாவது வகை. RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-21744382763195116592017-10-23T21:40:00.001+05:302019-12-07T12:39:39.056+05:30சாதம் போட்ட அன்னபூரணிகள்
எனது பாட்டிகள் இருவருமே அம்பாள்கள். சாதம் போட்ட அன்னபூரணிகள். வித்தை கற்க உதவிய சரஸ்வதிகள். அப்பாம்மா ஜெகதாம்பாள். அம்மம்மா சாரதாம்பாள். ஜெகதாவிற்கு ”குழந்தே... சாப்டியோ... பசிக்குமேடா...”என்று வாஞ்சையோடு தலை தடவிக் கேட்கத் தெரியும். எட்டாவது படித்துக்கொண்டிருக்கும் போது அரை பரீட்சை லீவில் “இன்னும் உனக்கு எவ்ளோ நாள் ஸ்கூலு..” என்று கேட்பாள். “நாலு வருஷம் பாட்டி...” என்றால் “நாலு மணியா... என்னடாRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-57568473841032676842017-10-22T22:43:00.000+05:302017-10-23T11:45:41.035+05:30விஜயவாடா கனக துர்க்கா
குன்றுப் பாதை செப்பனிடும் பணி நடப்பதால் மின்தூக்கியில் ஏழு மாடி தூக்கிச் சென்று தேவியிடம் விட்டார்கள்.
சட்டென்று தேவலோகத்தில் நுழைந்தது போலிருந்தது. சந்தனக் காப்பில் சிரித்த முகத்துடன் அருளினாள் கனக துர்க்கா. ஸ்வயம்பு என்கிறார்கள். பொன் மஞ்சளும் அரக்குக்கலர் பார்டரும் போட்ட பட்டுப் பாவாடையில் ஜெகஜோதியாய் பார்த்தேன். அற்புதமான தரிசனம். மனசுக்குள் இனம் புரியாத நிம்மதி. அம்மாவாரு அன்பின் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com2tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-88410455827259927812017-10-22T22:41:00.000+05:302017-10-22T22:41:15.070+05:30கொல்கத்தா: காளியின் நகரம்
கொல்கத்தாவின் சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தேன். “மிஷ்டர் ஆர்பியெஷ்” என்ற இன்முகத்துடன் வரவேற்ற டாக்ஸி ட்ரைவரின் காரேறித் திரும்பும் போது கண்ணில் பட்ட காம்பௌண்ட் சுவரின் காலில் பட்டை பட்டையாய் சிகப்பு வர்ணம். பான் ராஜாங்கத்துக்குள் நாம் நுழைவதை உணர்த்தும்விதமாக, மாடர்ன் ஆர்ட் போல கலைநயமாகத் துப்பியிருந்தார்கள். கிழக்கிந்திய கம்பனியார் வாணிபம் செய்ய வந்திறங்கிய இடம்.RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-38602679211297438032017-10-22T22:37:00.002+05:302017-10-22T22:37:47.026+05:30சாப்பாட்டு பவன்கள்
”மாவடு இருக்கா?”
“இத்வா ஜி?”
“ஊஹும். இது கட் மாங்கோ... மாவடு கேட்டேன். முழுசு முழுசா இருக்குமே...”
அப்படி முழுசா இருக்குமே என்று விரல்களால் மோத்தா கோலி உருட்டிக் கேட்ட மாமாவுக்கு சதாபிஷேகம் ஆகியிருக்க வேண்டும். படிய வாரிய கேசம். பேண்ட்டிற்குள் சர்ட்டை இன் செய்து மிடுக்காக இருந்தார். தீர்க்க சுமங்கலியாக வகிட்டில் உச்சிக் குங்குமத்தோடு மாமியும் பக்கத்தில் தோளுரசி நின்றிருந்தார்கள்.
“உனக்கு RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-40182357639164358442017-10-22T22:36:00.002+05:302017-10-22T22:36:42.114+05:30பிரார்த்தனை செய்வோம்
ஊர் சோம்பலாக விடிந்திருக்கிறது. ஆறு நாட்கள் பயணப்பட்டுப் பணி செய்து மேனி களைத்தவர்கள் சற்றுக் கூடுதல் ஓய்வாகப் படுக்கையில் சுருண்டிருக்கும் ஞாயிறின் முன்காலைப் பொழுது.
நானும் சின்னவளும் இருசக்கர வாகனத்தில் தலைகோதும் இளங்காற்றில் போய்க்கொண்டிருந்தோம். சவாரி இல்லாத ஆட்டோ ஊர்ந்து செல்லும் பத்து கி.மீ வேகத்தில் எங்கள் ஸ்கூட்டி சாலைக்கு வலிக்காமல் ஊர்ந்துகொண்டிருந்தது. மகளுடன் அப்படிச் செல்வதில் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-70054467399570912992017-10-22T22:35:00.000+05:302017-10-22T22:35:14.567+05:30பொன்வீதி
”ஹா.. இதெல்லாம் இணைய எழுத்துப்பா..” என்று ஈஸிசேரில் காலை நீட்டிச் சாய்ந்துகொண்டு பகடி செய்யப்படும்..சரி.. வேணாம்.. நையாண்டி செய்யப்படும் Blogல் 2011ம் வருடம் பிள்ளையார் சுழி போட்டேன். நம்ம சுவர் நம்ம எழுத்து என்றிருக்கும் இக்கால ஃபேஸ்புக் போல அக்காலத்தில் கிடைத்த இணைய ஸ்லேட்டு ப்ளாக். நாம என்ன இலக்கியம் படைக்கும் பெரிய எழுத்தாளரா? மனசுல பட்டதைத் தட்டச்சு செய்து ஏற்றிவிட்டு RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-16201490565157114042017-10-22T22:12:00.000+05:302017-10-22T22:12:05.092+05:30உதவி
வாஷர்மேன்பெட் "ரெட்டி ட்ரக்கிஸ்ட்ஸ்". அதோட ஓனர் ரெங்காரெட்டிக்கு கோதாவரிக்கரை ராஜமுந்திரிதான் பூர்விகம். வெங்கலக்ஷ்மி அவருடைய ஒரே செல்ல மகள். ரெட்டிக்கு முப்போதும் பிஸினஸ். எப்போதும் துட்டு. வரவுக்கு முகமலரும் ரெட்டி செலவுக்கு துக்கப்படுவார். பைசா பெயராது. லோபி.
"டாடீஈஈஈஈ..." என்று வெலெ இளமைப் பந்தாய் துள்ளிக்கொண்டே கடைக்குள் ஓடிவந்து கழுத்தைக் கட்டிப்பிடிக்கும் போது ரெட்டி தங்கப்பல் தெரிய RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-67767670325592979522017-10-22T22:03:00.000+05:302017-10-22T22:03:07.159+05:30பொட்டலம்
பாதி ரோடுக்கு டூவீலரும் அதை அணைத்துக்கொண்டு கார்களும் நிற்கும் நெரிசலானக் கடைத்தெரு. அதைத்தாண்டி விரித்த கோமணம் போல ஒரு சந்து. சந்து கடந்தால் பிரதான சாலை. திவாகர் நாயர் டீக்கடை வாசலில் டூ வீலரில் அமர்ந்திருந்தான். கையில் சிகரெட் புகைந்துகொண்டிருந்தது. நெற்றியில் துண்ணூரும் குங்குமமும் துலங்கின. கண்களுக்கு ரே பேன்.
" நாயரே... ஒரு கட்டஞ்சாயா.." குரல் விட்டான்.
அப்போது தீபா ஒரு லுக்கோடு அவனைக் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-46189609150162583882017-10-22T22:01:00.000+05:302017-10-22T22:01:19.564+05:30நால்வர் மாயம்
நள்ளிரவு நெருங்கும் நேரம். தனிமையாகக் காற்று வாங்கும் கடற்கரை. உச்சியில் முழுநிலா. எழுந்து அடங்கும் வெள்ளி அலைகள். மேல் சட்டையில்லாத நான்கு சிறுவர்கள் அலை பார்த்தபடி அண்ட்ராயரோடு அமர்ந்திருக்கிறார்கள்.
”டேய்... வீட்டுக்கு ஓடுங்கடா.. மணி எத்தினியாவுது?”
அமைதி.
“டேய்... சொல்றேனில்ல..”
மீண்டும் அமைதி.
“அடிங்.. ரெண்டு போட்டேன்னா தெரியுமா?”
“ஏட்டு.... போன நாயித்துக்கிளமதானே கடையாண்ட வந்து ஒருRVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-4981088873392157348.post-3397940822929381742017-10-22T21:59:00.001+05:302017-10-22T21:59:31.336+05:30விஷ்ணு சித்தன் ஸ்ரீராம்
என்னுடைய மன்னார்குடி டேஸ் அத்யாயங்களை ஏராளமாக ஆக்கிரமித்தவன் ஸ்ரீராம். தரை எட்டாத பெரிய சைக்கிளில் மேனியைக் கோணி காலூன்றி நின்று கொண்டு “வெங்குட்டூ..” என்று “டு” வை “டூ”வாக்கி நீட்டி முழக்கி கொல்லை வரைக் கூப்பிடுவான். காது மந்தமான சாரதா பாட்டியே “ஜில்லாலி வந்துருக்கான் போல்ருக்கு....” என்று மூக்குக் கண்ணாடியைத் தூக்கி விட்டுக்கொண்டு தோராயமாக வாசலைப் பார்ப்பாள். மன்னையில் ஹரித்ராநதி மதில் RVShttp://www.blogger.com/profile/12221974972586171137noreply@blogger.com0